செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.இந்த யோகா பயிற்சியில் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிபதி, சார்பு நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியை அரசு யோகா கல்லூரி டாக்டர் அரவிந்த் அவர்கள், யோகா கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து சிறப்பாக பயிற்சி வழங்கினார்கள். யோகா பயிற்சியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் போர்வாள் ஏ கே சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார். செங்கல்பட்டு பார் அசோசியேஷன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும்பயிற்சி அரசு யோகா கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர்.என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்