நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.ஓம் பிரகாஷ் மீனா அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை தலைமையகத்திலிருந்து வந்த பணி நியமன உத்தரவின்படி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவராக பணியிடை மாற்றம் பெற்றுள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இகாப அவர்கள் சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவர் பதவியிலிருந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனைபொருட்டு இன்று காலை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த திரு.ஓம் பிரகாஷ் மீனா அவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.யு.முருகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்கள்.
இதனைதொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பொதுமக்கள் மற்றும் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கைமேற்கொள்ளப்படும். காவல்துறை உயரதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நாகை மாவட்ட காவல்துறை மக்கள் நலனுக்காக தொடர்ந்து சீரிய முறையில் பணியாற்றும் குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தப்படும் காவல்துறை பொதுமக்களிடையே சுமூகமான முறையில் நல்லுறவு ஏற்படுத்தப்படும் என அவர் கூறினார்கள்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில் மேலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.