திருவண்ணாமலை : (12.06.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.M. சிவனுபாண்டியன் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) திரு.R.சௌந்தரராஜன் அவர்கள் உடன் இருந்தார்கள்.