திருவள்ளூர்: நெடுஞ்சாலையில், விபத்துகளும், உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதையில் ஓட்டுதல், சரியான தூக்கமின்றியும், அதிவேகத்திலும் வாகனம் ஓட்டுவதாலும், விபத்து நேரிடுகிறது. விபத்துகளை தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போலீசார் அவ்வப்போது ஊர்வலங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், லாரி உரிமையாளர்களுடன் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.கல்பனா தத் கலந்துரையாடினார். இதில் பேசிய அவர் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், வடசென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுவதால் லாரி போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக நிலக்கரி லாரிகள், சவுடுமண் லாரிகள், கண்டெய்னர்கள் போக்குவரத்து அதிகமாக காணப்படுகின்றன. இதனால் மீஞ்சூர், பொன்னேரி பஜாரில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுவதுடன், விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
பொன்னேரி, மீஞ்சூர் சாலை தகுந்த சாலையாக இல்லாததாலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாலும், தினந்தோறும் விபத்துக்கள், உயிரிழப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதனை தடுக்க லாரி உரிமையாளர்கள், GNT சாலையை பயன்படுத்தி வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், அளவுக்கதிகமாக சுமை ஏற்றக் கூடாது எனவும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொன்னேரி மீஞ்சூர் சாலையில் அனுமதி இல்லை எனவும் கூறினார்.
மேலும்,லைசன்ஸ் இன்சூரன்ஸ் இல்லாதிருந்தால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். இந்ந விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன், மிஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு.மதியரசன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்