தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது..வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. இங்குள்ள மொத்தம் 15 வார்டுகளில் அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றது .திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது..வெள்ளலூர் 12வது வார்டு அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றிபெற்றார். இதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிருஷ்ணா நகர்பகுதியில் தி.மு.க.வின் ஆதரவாளர்கள் ரெனி ( வயது 27) பிரெடி ( வயது 29)  ஆகியோரை அதிமுக ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினார்கள். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.