சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று 19.03.2021 அதிக எண்ணிக்கை கொண்ட வாக்கு சாவடிகளான இராயப்பேட்டை , லாயிட்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி , உருது துவக்க பள்ளி , அரங்கநாயுடு பள்ளி , சூளைமேடு , நமச்சிவாயபுரம் மாநகராட்சி பள்ளி வளாக இடங்களுக்கு சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் சார்ந்த நடவடிக்கைகள் எடுத்து வரும் மற்ற துறை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அயனாவரம் , ஐ.சி.எப் பள்ளிக்கு சென்று , பார்வையிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாக பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார் , மேலும் நுங்கம்பாக்கம் , லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.