திருநெல்வேலி மாவட்டம் தேவார்குளம் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாக, ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த கருவா கார்த்திக் (வயது 23) என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த இளைஞர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததையடுத்து, மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகர் அவர்களின் பரிந்துரைபடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன், இ.கா.ப., அவர்களின் பரிந்துரை மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில், அவருக்கு குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

இதற்கமைய, 04.06.2025 அன்று, கார்த்திக் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.
சட்ட ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் பொதுமக்கள் மீது அச்சம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கும் நோக்கில், காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்