திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சதானந்தம் அவர்கள் தனது 35வருட பணி ஓய்வு பெறுகின்றார்.
காவல்துறை பணியில், எவ்வித தவறான செயல் இன்றி, தனது பணியில் மென்மேலும் சிறப்பாக பணியாற்றி, காவல்துறைக்கு பல வெற்றிகளையும், சாதனைகளையும், தேடிதந்தவர் உதவி சிறப்பு ஆய்வாளர் திரு. சதானந்தம் அவர்கள்.
பணிநிறைவு விழாவில், ஒட்டன்சத்திரம் சரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி அவர்களது தலைமையில், ஒட்டன்சத்திரம் சரக காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசன் மற்றும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராஜா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
இவ்விழாவில் ரெட்டியார்சத்சிர ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சதானந்தம் அவர்களை வாழ்த்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா