வேடசந்தூர் அருகே மரத்தில் திமுக பிரமுகரின் கார் மோதி விபத்து, சிறுவன் பலி
திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜுலுல் ஹக் ஓட்டி வந்த கார் வேடசந்தூர், லட்சுமணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஜுலுல்ஹக் மகன் நூருல் அமீன்(12) உயிரிழந்தார்.
மேலும் காரில் வந்த சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூருல் அமீன் திண்டுக்கல் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பஷீர்அகமது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் வழியில் மலைப் பிரதேசத்தில் நோயாளியை ஏற்றி வந்த 108 அரச ஆம்புலன்ஸ் பிரேக் கட்டாகி கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதியது இதில் கிளீனர் மற்றும் பயணித்த நோயாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டது
இதனையடுத்து அவ்வழியில் வந்த சுற்றுலா வாகனத்தில் காயம் பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் மலை பிரதேசத்தில் இயங்கக்கூடிய அரசு ஆம்புலன்ஸ் முறையாக பராமரிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கும்பறையூர் பிரிவு அருகே இன்பச் சுற்றுலா சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுற்றுலா வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர்.விபத்து நடந்த நேரத்தில், அவ்வழியாகக் கொடைக்கானலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி (BDO) பிரபா ராஜமாணிக்கம் விபத்து குறித்து உடனடியாக தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கும், 108 ஆம்புலன்ஸிற்கும் தகவல் அளித்து,படுகாயமடைந்தவர்களுக்கு மனிதநேயத்துடன் உதவியுள்ளார்.இதை யடுத்து பொதுமக்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
ண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா