திண்டுக்கல் : (28.07.2022) திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியில், ஒரு வீட்டில் சோதனை செய்ததில் அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது, மேற்கொண்டு விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில், ஈடுபட்ட நபர்கள் தெத்துப்பட்டியைச் சேர்ந்த வைரவன் (22), சுந்தரபாண்டி (35), நவீனா (22), மற்றும் மேற்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (20), ஆகிய நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா மற்றும் 02 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
