அ.தி.மு.க. பிரமுகரின், மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் புல்லட் ராஜா அ.தி.மு.க. பிரமுகர். இவர் தனது மோட்டார் சைக்கிளை விற்க முயற்சி செய்து வந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் தோட்டியனூரை சேர்ந்த கார் டிரைவர் செங்கோட்டையன் (41), என்பவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக விலை பேசியுள்ளார் பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ராஜா, தனது மோட்டார் சைக்கிளை வேடசந்தூர், பழனி சாலையில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, டீக்கடை முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து வேடசந்தூர் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் திருமதி. துர்கா தேவியின், தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், டீக்கடை அருகே மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை திருமதி, ஆய்வு செய்தனர் அதில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் டீக்கடை பகுதிக்கு வந்த செங்கோட்டையன் ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை திருமதி, பவானி அருகே செங்கோட்டையனை கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
வேன் மோதி, வாலிபர் பலி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வடகவுஞ்சி அருகே டெம்போ ட்ராவலர் வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பழனியை சேர்ந்த அருண்குமார்(30), என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார், இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை.
