கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விதமாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த கவுண்டம்பாளையத்தை சண்முகவேல் என்பவரது மகன் கருப்புசாமி 53. என்பவரை கைது செய்து
அவரிடமிருந்து கேரளா லாட்டரி சீட் –5 மற்றும் ரூ.500/– பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்