திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுதியா நான்குசக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்
















