ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 போ் உயிரிழந்தனா். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.