கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்பேரில், இன்று 16.03.2024 தேதி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் அவர்கள் தலைமையில் கடலூர் புனித அன்னாள் CBSE பள்ளியில் சைபர் கிரைம் பற்றி பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பெருகி வரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்பாடு குறித்தும் குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், குறிப்பாக போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி தொடர்பான Link ல் செல்லகூடாது, மற்றும் தற்போது பெருகி வரும் E CHALLAN FRAUD, EB BILL Fraud, Part Time Job Fraud குறித்தும் நோட்டீஸ் வழங்கியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.