சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த காஷ்மீர் மாநிலத்தில் பயின்றுவரும் பள்ளி மாணவர்கள், CRPF குழுவினருடன் நல்லெண்ண அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களை 29.02.2020 அன்று சந்தித்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி பள்ளி மாணவர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.கபில்குமார் சரத்கர், இ.கா.ப, அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை