சென்னை: செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS ஆய்வு செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று மாலை தீயணைப்பு துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, IPS திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த ஆவணங்கள் தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தை அவர் ஆய்வு செய்தார். அவருடன் சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை அலுவலர் ஆறுமுகம், செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கோபால் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை