தூத்துக்குடி: தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருளப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் போலீசார் (24.05.2025) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓம் சக்திநகர் பகுதியில் வைத்து தூத்துக்குடி தேவர்புரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இசக்கி மகன் முத்துக்குமார் (39), கொளத்தூர் பனையூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரமேஷ் (45). தாளமுத்துநகர் துரைசிங் நகரை சேர்ந்தவர்களான மணி மகன் ஆதிலிங்கம் (44). ஆதிலிங்கம் மகன்கள் வசந்த லிங்கதுரை (24). ஆதி ஆனந்த லிங்கம் (21). சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்தவர்களான மூர்த்தி மகன் சஞ்சய் குமார் (31). மணிராஜ் மகன் வீரா (30). தூத்துக்குடி செல்சினி பகுதியைச் சேர்ந்த தவமணி சிவலிங்கம் மகன் தவமணி (62). ஆகிய 8 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளிகளான 8 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 70,400/- ரொக்கப்பணம் மற்றும் சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.