தமிழ்நாடு அரசு சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து – ஆராய்ச்சி மற்றும் கல்வி சூழலியல் அறக்கட்டளை (ரீஃப்) ஏற்பாட்டில் நடத்திய உலக சூழலியல் நாள் விழா 2025 சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (எம்.சி.சி) எம்.ஆர்.எப் இனோவேஷன் பார்க் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள்,சுற்றுச்சூழல்,ஆர்வலர்கள் மற்றும் ரீஃப் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வைத் தொடக்கி வரவேற்ற ரீஃப் மற்றும் எம்.சி.சி நிர்வாகிகள்,நாளின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு,நாள் முழுவதும் நடைபெறவுள்ள செயல்திட்டங்களை வெளியிட்டனர்.
சிறப்பு விருந்தினர் மற்றும் தலைமை உரையாளராக அழைக்கப்பட்டவர் ஆசிரியரும், மருத்துவ குறியீடு நிறுவனம் ( இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் கோடிங்) எம்.சி.சி,எம்.ஆர்.எப்,இன்னொவேஷன் பார்க்–இன் பொறுப்பாளருமான திருமதி முத்தமிழ் செல்வி,அவரது உரையில், இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் வகிக்க வேண்டிய பிரதானப் பங்கு குறித்தும், கல்வி நிறுவனங்கள் எப்படி பசுமை உணர்வை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த 35 மாணவர்கள் (முக்கியமாக உயிரியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானத் துறையினர்) பங்கேற்ற சுற்றுச்சூழல் குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் கீழ்காணும் தலைப்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தன:
உயிரியல் பன்மை மற்றும் பாதுகாப்பு,காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள்,கடலோர சூழல்கள்,சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் தேசிய பசுமை திட்டங்கள்,நீடித்த வளர்ச்சி குறிக்கோள்கள் தனித் தனி மாணவர்கள் தங்கள் பார்வையில் ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையைத் தெரிவித்து, சுருக்கமாக உரையாற்றும் அமைப்பும் நடைப்பெற்றது.பிளாஸ்டிக் மாசு,வனவெட்டம்,நீரிழிவு,கடல் மைக்ரோபிளாஸ்டிக்கள், பசுமை ஆற்றல் போன்ற தலைப்புகள் பற்றி மாணவர்கள் பேசினர். இது மாணவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, சுற்றுச்சூழல் சிக்கல்களுக்கு தீர்வாக தாங்களே யோசித்து திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும் பயிற்சியும் நடைபெற்றது.
கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்கள்,கழிமுக பகுதிகளில் மாங்க்ரோவ் மரங்கள் மறுவளர்ச்சி,தண்ணீர் மாசுபாடுகளை புகாரளிக்க மொபைல் செயலி,கிராமப்புற பள்ளிகளில் பசுமை மாணவர் கழகங்கள்,கல்லூரிகளுக்கான கழிவுநீர் மீள்சுழற்சி முறை,குறைந்த செலவில் காற்று தரத்தை கணிக்கும் கருவி குறித்து குழுவினர் தங்கள் திட்டங்களை மேடையில் விளக்கினர். மதிப்பீட்டாளர்கள் அவர்களின் சிந்தனையை பாராட்டினர்.
ரீஃப் அமைப்பின் பொருளாளரான வினோத் “மாணவர்களின் பங்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலும் தீர்வுகளிலும்” என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் உரையாற்றினார். “மாணவர்கள் உங்கள் சமூகத்தில், பள்ளி/கல்லூரிகளில் சூழல் விழிப்புணர்வை தூண்டும் தலைவர்கள் ஆக வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.
முக்கிய விருந்தினர் திருமதி. முத்தமிழ் செல்வி, சிறந்த திட்ட முன்மொழிவு மற்றும் பேச்சுக்கான விருது மற்றும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு