தேனி : தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருந்த கைரேகை பிரிவு காவல்துறையினருக்கும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கும்,பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கிய காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி, மேலும் சிறப்பாக பணிபுரிய தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.