திருச்சி: கடந்த 06-01-22-ம் தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ்நகர் தேவர் தெருவில் வசிக்கும் நபரை ராகவேந்திரன் என்பவர் அசிங்கமாக திட்டியும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதாகவும் பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராகவேந்திரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் வழக்கின் குற்றவாளியான ராகவேந்திரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, ராகவேந்திரன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், ராகவேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ராகவேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்