கோவை: கோவை மாவட்டம், சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியைக் கடந்த 05.02.2022-ம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமுகை காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. வேளாங்கண்ணி உதயரேகா அவர்கள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில் , ஈரோடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து 29. என்பவர் அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. எனவே அந்நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்திட 181, 1098 மற்றும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212,7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்