திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (16). வயது சிறுமி மற்றும் வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பேட்ரிக்சிலுவைமுத்து(19). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்தது தொடர்ந்து சிறுமி பேட்ரிக்சிலுவைமுத்துடன் பேச மறுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி பார்ப்பதற்காக சிறுமியின் வீட்டிற்கு வந்த பேட்ரிக்சிலுவை முத்துவை சிறுமி காதலிக்க மறத்த தாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த அவர் சிறுமியை தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக பேட்ரிக் சிலுவை முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா