திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ராம்(20) என்பவர் காதலிப்பதாகக் கூறி பலமுறை தனியாக இருந்துள்ளனர்.தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.இதனையறிந்த சிறுமியின் தாயார் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திருமதி.தேன்மொழி அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய ஸ்ரீராமை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா