மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்க, துணி துவைக்க அனுமதிக்க கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இங்கு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகம் குளிக்க, துணி துவைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை, திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ,போராட்டத்தில் ஈடுபட்ட இடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை உடன்பட ஏற்படாததால், அனைவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி