திருச்சி : திருச்சி மாநகர பெரியமிளகுபாறை பிரிவுரோடு பகுதிகளில், இளைய சமுதாய இளைஞர்களை சீரழிக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்த சரித்திரபதிவேடு ரவுடி முத்துராமன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளி, தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் குற்றச்செயல்களில், ஈடுபடுவதை தடுப்பதற்காக, குற்றவாளியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஒரு வருட காலத்திற்கு கஞ்சா விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி குற்றவாளி தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி குற்றவாளி நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனை செய்து வந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 74 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி எதிரி உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட் டார்.