கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார்.அவரது வீட்டின் அருகில் சந்தன மரம் ஒன்று வளர்ந்து வந்துள்ளது அதனை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார்.
இது சம்மந்தமாக துடியலூர் காவல் நிலையத்தில் அருணாச்சலம் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜாஅவர்கள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட தமிழ்மணி என்பவரின் மகனான கருப்பசாமி(24) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்