தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முனியசாமி மற்றும் போலீசார் (15.12.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி காமராஜ்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் நாகமலை (26) என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி நாகமலையை கைது செய்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் மற்றும் கத்தியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.