கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18.02.2022-ம் தேதி பிரசாத் அவர் குடும்பத்தினருடன் காரமடை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது உறவினர்களின் தொலைபேசிகளை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூபாய் 80,000 மதிப்புள்ள மொபைல் போன்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக பிரசாத் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட முத்துசாமி என்பவரின் மகனான மனோஜ் குமார், சுப்பிரமணி என்பவரின் மகனான கார்த்திக், ரங்கநாதன் என்பவரின் மகனான அருண் மற்றும் முருகேசன் என்பவரின் மகனான ஜெகதீஷ் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தும், அவர்கள் திருடிய மொபைல் போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்