கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்களை கைது செய்யும் பொருட்டு, சிறுமுகை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வேளாங்கண்ணி உதயரேகா அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.750/-ஐ பறிமுதல் செய்தனர்.
சட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்