கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அன்னூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நித்தியா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,
அன்னூர் பசூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பரமக்குடியை சேர்ந்த அம்மாசி என்பவரது மகனான புலிக்குட்டி @ பாலமுருகன் 30. மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர மகனந்தா என்பவரது மகனான லோக்நாத் மகனந்தா 27. ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்