கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்கள் திரு. ஜெகநாதன் மற்றும் திருமதி. பாண்டியம்மாள் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.5,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக சேவல் வைத்து சூதாட்டம் விளையாடிய இரண்டு நபர்களை உதவி ஆய்வாளர் திரு. அருள்பிரகாஷ் அவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து சேவல்-2 மற்றும் ரூ.1,500/- ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இ
துபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்