கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பி. நாகூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ( வயது 56) விவசாயி. இவர் நேற்று தனது பைக்கில் வடக்கிபாளையம் – நடுபுணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கோவிந்தனூர் யூனியன் தொடக்கப் பள்ளி கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒருவேன் இவரது பைக் மீது மோதியது. இதில் சுந்தர்ராஜன் படுகாயமடைந்து அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து அவரது மனைவி வேலுமணி (வயது 40) வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடுமலை பக்கமுள்ள கள்ள பாளையத்தை சேர்ந்த வேன் டிரைவர் ராஜேஷ் குமார் ( வயது 27) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு பக்கமுள்ள வி. ஆர். வி நகரை சேர்ந்தவர் மனோஜ். (வயது 45) இவர் நேற்று தனது பைக்கில் கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .ஜி.என். மில் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள சுவர் மீது பைக் மோதியது. இதில் மனோஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரைசிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்