கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள வலையபாளையம் அருக் காணியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சரண்யா (வயது 27) இவர் கருமத்தம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மோள காளிபாளையம் சிவன் கோயில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் சரண்யா படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சரண்யாவின் தாயார் லட்சுமி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில்புகார் செய்தார். போலீசார் மற்றொரு பைக் ஓட்டி வந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
