கோவை : கோவை செல்வபுரம் பக்கம் உள்ள பூசாரிபாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன்கள் ராமச்சந்திரன் வயது 32 ராஜ்குமார் வயது 33 இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அண்ணன் ராஜ்குமார் தம்பி ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்றார். அவரிடம் தகராறு செய்தார் பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தம்பி ராமச்சந்திரனை குத்தினார் . இதை தடுத்த ராமச்சந்திரனின் மனைவிக்கும் கத்திக்குத்து விழுந்தது இருவரும் படுகாயம் அடைந்தனர் இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் அவரது அண்ணன் ராஜ்குமாரை நேற்றிரவு கைது செய்தனர் . இவர் மீது கொலை முயற்சி உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்