கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த (29.08.2021) அன்று ரமேஷ் என்பவரை கொலை செய்த கொலை வழக்கு குற்றவாளியான போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த
ரகுகிருஷ்ணன்குள்ளி (எ ) ரகுபதி 20. என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. சமீரன் இ.ஆ.ப., அவர்கள் ரகு கிருஷ்ணன் (எ) ரகுபதி 20. மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் படி கொலை வழக்கு குற்றவாளியான மேற்கண்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்