திண்டுக்கல் மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை.
23.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.மேட்டுப்பட்டியில் கடந்த வருடம் முன்விரோதம் காரணமாக பெரிய தம்பி(72) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த குமரவேல்(25) என்பவரை சாணார்பட்டி காவல்நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குமரவேலுவின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் குமரவேலுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் குமரவேலுவை திண்டுக்கல் சிறையில் இருந்து எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.