திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட சுத்தமல்லி, வ.உ.சி நகரைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் கருத்தப்பாண்டி என்ற கண்ணன் (44), என்பவர் திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சுத்தமல்லி காவல் ஆய்வாளர் திரு. ஜீன்குமார் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (09.08.2022) இன்று குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
                                











			
		    


