திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் இன்று முதல் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள 263 கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குள்ளணம்பட்டி, ரவுண்ட்ரோடு புதூர், ரவுண்ட்ரோடு, சிலுவத்தூர் ரோடு, மரியநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 20-கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களை தற்போது அகற்றியுள்ளனர்.
மேலும் கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிக்கம்பங்களுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுவர்கள் ஆகியவை பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் இடித்து வருகின்றனர்.
தொடர்ந்து கொடிக்கம்பங்கள் அகற்றும் பணியானது தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா