இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC) அவர்களின் அறிவுரையின் படி காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி (CWC) அவர்கள் தலைமையிலான போலீசார் அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு (POCSO) பற்றியும், குழந்தை திருமணம் தடுப்பு பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு பெண்களுக்கான உதவி எண் -181 குழந்தைகளுக்கான உதவி எண்- 1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.