தென்காசி : தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில், ஈடுபட்டு வந்த VK புதூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகனான கருப்பசாமி(23), என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (16.08.2022), அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திருமதி.சுதந்திரதேவி அவர்கள் சமர்பித்தார்.