திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலக்குப்பம் பகுதியில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்தது. இந்த கிளினிக்கில் முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட தனியார் கிளினிக்கிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல், காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது உறுதியானது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். தனியார் கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு