திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டதில் பெங்களுரிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுப்பட்ட – முருகானந்தம் (42). த/பெ. ஆறுமுகம், மெயின் ரோடு, ஆவூர் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார். மேற்கண்ட நபர் கடத்தி வந்த 9 கிலோ குட்கா பொருட்கள் (ஹான்ஸ், விமல் பாக்கு, V1 பாக்கு, கூலிப்) பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு குட்கா விற்பனையில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.