கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் வெள்ளை குட்டை காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹25,800/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது, வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.