திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்
















