திருவாரூர் : திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவலர்கள் வாகன சோதனையின் போது பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த – 1) காமராஜ் (எ) சரவணன் (37/25). த/பெ.முத்துசாமி, வடக்கு தெரு, அத்திக்கோட்டை, மன்னார்குடி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
நன்னிலம் உட்கோட்டம், நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த – 2) ஹரிஹரன் (28/25). த/பெ. இளங்கோவன், சந்தைபேட்டை தெரு, சன்னாநல்லூர், நன்னிலம், 3) ராஜேஷ் (40/25). மாரியம்மன் கோவில் மேலத்தெரு, ஆதலையூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். மேற்கண்ட நபர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கூலிப், ஹான்ஸ் என 41 கிலோ (மதிப்பு ரூ.61,600/-) குட்கா பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.