திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திடீர் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை வீட்டில் மொத்த விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த – பவுன்ராஜ் (வயது-56). த.பெ.முருகையன், டீச்சர் நகர், மேலவாசல், மன்னார்குடி என்பவர் கைதுசெய்யப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்த 195 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு குட்கா விற்பனையில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களைதிருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.