தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக (20.12.2022), தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு புத்தாடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், பொருளாளர் திரு. கணேசன், மாவட்ட செயலாளர் திரு. மார்க் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மயிலேறும்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட மாதா குடிபோதை தடுப்பு இயக்குனர் திரு. ஜெய்கர், திரு. ராஜா ஸ்டாலின், திரு. சாம்ராஜ், திரு. குணசிங், திரு. பரத், திரு. அகஸ்டீன், திரு. சொக்கலிங்கம். திரு. முத்துகுமார், திரு. ஹரிஹரன், திரு. ராஜா மற்றும் திரு. லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.