கோவை : கோவையை அடுத்த சூலூர் , கோபால் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 63) இவர் நேற்றுகோவை- திருச்சி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.சூலூர் காவல்நிலையம் முன்புறம் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுப்பிரமணியம் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவ கொண்டு சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சூலூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து பைக் ஓட்டி வந்த சூலூர் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த பிரதீப் குமார் (வயது 27) என்பவரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.