தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில், வந்த புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.தனராஜ் கணேஷ், அவர்கள் தலைமையிலான காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று 05/08/2022 தென்காசியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.